பிரபலமான இடுகைகள்

Translate

ஞாயிறு, 1 நவம்பர், 2009

தமிழ்நாட்டில் சமச்சீர்கல்வி வரும்ஆண்டில் 1, 6 ஆகிய வகுப்புகளில் நடைமுறைக்கு வரும் என்று சொல்லப் படுகிறது. அக்கல்வியில் தமிழும் பிற மொழிகளும் பயிற்று மொழிகள் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

கல்விக் கொள்ளையடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த இது ஓரளவு உதவலாம். அதுவும் அந்நிறுவனங்களின் போராட்டத்திற்குப்பின் என்னாகும் என்று பார்த்த பின்தான் முடிவுசெய்தல் வேண்டும்.

ஆயினும் தமிழும் பிறமொழிகளும் பயிற்றுமொழிகள் என்பது வேப்பங்காயாய்ப் பாகற்காயாய் எட்டியாய் கசக்கின்றது. திரவிட இயக்கத்தின் தோல்வியாகத்தான் இந்த அறிவிப்பைக் கொள்ள வேண்டும். தமிழ்மட்டும் பயிற்று மொழி. அடிப்படைக் கல்விமுதல் ஆய்வுக்கல்விவரை தமிழே பயிற்று மொழி என்பதுதான் கல்விக் கொள்கை வகுத்த காந்தியடிகள் முதல் மாண்டிசோரி வரை கூறியிருக்கிறார்கள்.ஆனால் பல மொழிகளுக்கு வழிவிடுதல் தமிழ்இனம் மேலும்மேலும் அடிமைப்பட்டு அழிந்துபோகத்தான் வழி செய்யும்.

தமிழில் படித்தால் தான் வேலை என்னும் அறிவிப்பைச் செய்து அத்துடன் பயிற்றுமொழி தமிழ்மட்டுமே என்று த.நா. அரசு சொல்லும் நாளே பொன்னாள்.

- க.தமிழமல்லன்
தலைவர்
தனித்தமிழ் இயக்கம்,
66, மாரியம்மன் கோயில் தெரு,
தட்டாஞ்சாவடி,
புதுச்சேரி - 605 009. 9/15/09 by அ. பசுபதி Delete

1 – 11 of 11

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக