பிரபலமான இடுகைகள்

Translate

செவ்வாய், 14 அக்டோபர், 2014

தமிழ்வளர்ச்சித்துறை

                                                தமிழ்வளர்ச்சித்துறை

சனி, 6 செப்டம்பர், 2014

புதுச்சேரிஅரசு தமிழ் வளர்ச்சித்துறை ஒன்றை அமைக்க வேண்டும் என்னும் வேண்டுகோளைத் தனித்தமிழ் இயக்கம் முதலமைச்சர் அரங்கசாமியிடம் அளித்தது. அது 32ஆண்டுக்காலக் கோரிக்கை. முதல்வர் சட்டமன்றத்தில் முன்னரே உறுதியளித்தும் இதுவரை அமைக்க முன்வராதது பெரிதும் வருந்தத்தக்கது.


திங்கள், 10 மார்ச், 2014



முனைவர் க.தமிழமல்லன் அவர்களின் வெல்லும் தூயதமிழ் மாத இதழ் பற்றி முனைவர் ஆ.மணி அவர்கள் தம் முகநாலில் எழுதிய கருத்துரை
“வெல்லும் தூயதமிழ் புதுச்சேரியில் சிற்றிதழ்கள் பலவாகப் பெருகி இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கிடையே தனித்தன்மையும் பீடும் உடைய இதழ் என மதிப்பிட்டால் ஒரு சிலவே அமையும். சில இதழ்கள் தனி மனிதர்களின் பெருமையைப் பறைசாற்றவே வருகின்றனவோ என எண்ணத் தோன்றும் வகையில் இருப்பதைக் காணலாம். ஆனால் அவற்றிலிருந்து மாறுபட்டு வெல்லும் தூயதமிழ் திங்கள் இதழ் அமைந்திருப்பதை அவ்விதழைப் பார்த்தவுடன் நாம் அறியலாம்.
        ஓர் இதழ் 20 ஆண்டுகளைக் கடந்து வெளிவருவதே வரலாற்றுச் சாதனை. அதுவும் உரிய காலத்தில் இடைவெளியில்லாமல் வெளிவருவது இன்றைய வணிக உலகில் எத்தகைய அருஞ்செயல் என்பதை எண்ணிப்பாருங்கள்.
     
தமிழ் இதழ் எனச் சொல்லிக்கொண்டுத் தமிழ்ச் சொற்களை ஆளவோ, பிழையில்லாமல் செய்திகளை வெளியிடவோ இயலாத இதழ்களுக்கிடையே தனித்தமிழில் ஓர் இதழை வெளியிட்டுப் பரப்புவது என்பதில் எத்தனை துன்பமிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் வெல்லும் தூயதமிழ் இதழின் சிறப்பும், சிறப்பாசிரியர் முனைவர் தமிழமல்லன் பேருள்ளமும், தமிழ் நெஞ்சமும் விளங்காமல் போகாது. நெடுநாட்களாகவே வெல்லும் தூயதமிழ் இதழ் பற்றி எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். இன்றுதான் அதற்கான சூழல் அமைந்தது.
           
தமிழில் பிழையற எழுதக் கற்றுக் கொள்ளவேண்டுமா?. தனித்தமிழில் உரையாட வேண்டும் என்ற எண்ணமுண்டா?. மறைமலையடிகள் ஊட்டிய உணர்வில் கலந்துருக வேண்டுமா?. இதற்கெல்லாம் தனியே சென்று கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. ஓர் எளிய வழியுண்டு. வெல்லும் தூயதமிழ் திங்களிதழைப் படிப்பதுதான் அது. தமிழ் உணர்வாளர்கள் இதுபோன்ற இதழ்களைப் புரப்பது போற்றுதலுக்குரியது என்பதை மனங்கொள்ள வேண்டும். தனித் தமிழ் போற்றுவோம். தமிழ் போற்றுவோம்.


மருத்துவம்
பிறசொற்கள் நீக்கப்படவில்லை
இணையத்திலிருந்து

சொத்தை விழுந்த நகங்களில் மருதாணியை இலையைத் தொடர்ந்து அரைத்துப் பற்று போல் போட்டு வந்தால் அந்த சொத்தை மறையும்.நெல்லி இலை, மருதாணி இலை ஆகிய இரண்டு இலைகளில் ஏதாவது ஒரு இலையை எடுத்து, அதை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அவித்து அந்த நீரிலேயே அடிக்கடி வாய் கொப்பளித்து வர, வாய்வேக்காடு ஆவியாகி மறைந்துவிடும்.வெள்ளரிப் பிஞ்சில் எந்த வைட்டமின்களும் இல்லைதான். ஆனால் இதைச் சாப்பிடுகிறபோது இரைப்பையில் ஒருவித ரசம் உற்பத்தியாகிறது. இது ஜீரணத்தைத் தூண்டுகிறது.சமையலில் பிரதானமாக உபயோகிக்கப்படும் வெங்காயம் ஒரு அரு மருந்து. பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும். வழக்கமாக வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால் முடக்கு வாத நரம்பு நோய்கள் தாக்காமல் தடுக்கும்.வாழைப்பழங்களில் சோடியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற பல வகைச் சத்துக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்கள் வீதம் சாப்பிட்டு வந்தால் இதய அழுத்தம் ஏறாமல் சீராக இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம்.கறிவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் இதைப் பச்சையாகவே சாப்பிட்டு வரலாம். அது ரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. பசியைத் தூண்டிவிடுகிறது. வயிற்று இரைச்சலையும் குறைக்கிறது.கீரையின் பொதுத் தன்மைகள்உடல் தேற்றி, சிறுநீர் பெருக்கி, வியர்வைப் பெருக்கி, கோழை அகற்றி.மருத்துவப் பயன்கள்வாய்ப்புண், வயிற்றுப்புண்களை ஆற்றும் ஆற்றல் படைத்தது மணத்தக்காளிக்கீரை. கையளவு கீரையை எடுத்து வாயில் போட்டு மெல்ல வாய்ப்புண்கள், நாக்குப் புண்கள் ஆறும். உடலுறுப்புகளில் வேறெங்கும் புண் இருந்தால் அவையும் குணமாகும்.வெறும் கீரையை உண்டாலே வாய்ப்புண்களை ஆறும். சிறிது மஞ்சள் பொடியை சேர்த்து கீரையை வேக வைத்து உண்டால் புண்கள் சீக்கிரம் ஆறும். குடல் புண்களையும், மணத்தக்காளி ஆற்றும். வாய்ப்புண், நாக்குப்புண், வாய்வேக்காடு, குடல் புண் போன்றவற்றுக்கு மணத்தக்காளிகீரை கண்கண்ட மருந்தாகும். வாய் வெந்திருக்கும் போது மணத்தக்காளி + சிறிது சீரகம் + ஒரு மிளகாய் வற்றல் சேர்த்து, எண்ணெய்யில் வதக்கி, தண்ணீர் சேர்த்து வேக வைத்து, பிறகு அதில் தேங்காய்ப்பால் சேர்த்து வேக வைத்து உண்டால் வாய்ப்புண் உடனே குணமாகும்.காய், கீரை இரண்டையும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் காங்கை (சூடு) தணியும். உடல் குளிர்ச்சியடையும்.ஒரு கைப்பிடி அளவு கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லி, நான்கு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து கஷாயமாக செய்து குடித்து வர சிறுநீர் நன்கு பிரியும். நீர்க்கடுப்பு, எரிச்சர் குணமாகும்.இலைச்சாற்றை வெளிப்புண்கள் மேல் தடவினாலும் ஆறிவிடும்.இலைச்சாற்றை சர்மம், தேமல், சொறி சிரங்கு இருக்கும் இடத்தில் தடவினால் அவை மறையும்.மணத்தக்காளி இலைச்சாற்றுடன் பால் சேர்த்து குடித்து வர, காமாலை குணமாகும்.உடல் இளைத்திருப்பவர்கள் மணத்தக்காளி சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட உடல் பருக்கும்.வாத நோய்கள் குணமாக, மணத்தக்காளி கீரையை உப்பு போட்டு சமைத்து சாப்பிட வேண்டும். கப நோய்களுக்கும் நல்ல மருந்தாகும். கப நோய்கள் தீர, ஒரு கைப்பிடி மணத்தக்காளிக்கீரையை எடுத்து 10 மிளகு, 3 திப்பிலி, 4 சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து விழுதாக அரைத்து, அதில் தேன் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல்தணியும்.மணத்தக்காளிக்கீரை மலச்சிக்கலை போக்கும்.உடல் எடை குறைய, மணத்தக்காளி கீரையை 100 கிராம் எடுத்து கொதிக்கும் நீரில் 5 (அ) 10 நிமிடம் போட்டு எடுத்து 2 வெங்காயம் (அரிந்தது) + பாதி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கஷாயம் தயாரிக்கவும். இதை காலை உணவுக்கு பின் சாப்பிட்டால் அதிஸ்தூலம் (அதிக உடல் பருமன்) குறையும்.

     தக்காளி இலைகளை தெரிந் தெடுத்து நன்கு நாலு அல்லது ஐந்து முறை சுத்தமான நீரினால் திரும்ப திரும்ப கழுவிச் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொண்டு சுத்தமான இரும்பு பாத்திரம் அல்லது மண்கட்டியில் தேங்காங்காய் எண்ணை அல்லது நெய்யை விட்டு அடுப்பிலேற்றி கடுகு போட்டு தாளித்து விட்டு அதனுடன் நறுக்கிய சின்னவெங்காயத்துடன் மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு தாளித்துவிட்டு இதனுள் சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரையைப் போட்டு அதனுடன் சேர்த்து தக்காளிப் பழத்துண்டும் போட்டு தேவையான அளவு நீர்ரும் உப்பும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பின் இறக்கி சூப்பாக பருக முடியும்.குணப்படுத்தும் நோய்கள்:பருகினால் வாய் கிரந்தி வேக்காடு வராது வாய்ப்புண் வராது. வந்தாலும் குணமாகி விடும். 











முனைவர் க.தமிழமல்லன்
தன்குறிப்பு
1.பெயர்    க.தமிழமல்லன்  (வடமொழியிலிருந்த இயற் பெயரை முழுமையாக    மாற்றிக்கொண்டார்)
2.பிறந்த இடம் ;  தட்டாஞ்சாவடி, புதுச்சேரி 605 009
3.பெற்றோர்- திரு.பொ.கண்ணையன், திருவாாட்டி க.தனலட்சுமி
4.கல்வி : முனைவர்,  க.மு.கல்.இ --எம்.ஏ. பி., ஏ ட்---
5.அலுவல் ; முதனிலைத் தமிழாசிரியர்
 6.ஈடுபாடு கொண்ட
இலக்கியத்துறைகள்         1.பாடல்
                                                                2.சிறுகதை
                                                                3.பாவியம்
                                                                4.ஆராய்ச்சிக் கட்டுரைகள்
                                                                5.சிறுவர் இலக்கியம்
                                                                6.இதழியல்
                                                                7.உரைவரைதல்
                                                                8.இலக்கிய இயக்கங்கள் நடத்துதல்
                                                                9.மொழிநலப் போராட்டங்கள் நடத்துதல்
7. எழுதியுள்ள நால்கள் ; 37 நுால்கள்
8. இலக்கியப்பணிப் பட்டறிவு ; 42 ஆண்டுகள்
9.நடத்துகின்ற மாத இதழ் ;  வெல்லும் துாயதமிழ்
10. தொடங்கிய ஆண்டு ; 1993
11.அயல்நாட்டுப் பயணம் ;      2 முறை மலேசியா
                                                                     2 முறை சிங்கப்பூர்
                                                                     1 முறை இலங்கை
                                                                     1 முறை தாய்லாந்து
12.வாழ்க்கைமுறை ; ஒழுக்கமான வாழ்க்கை, தீய பழக்கம் எதுவுமின்மை,
கடன்இன்மை. பொதுநலம், தமிழின நாட்டுரிமைக்காக எப்பணியும் செய்ய அணியமாயிருத்தல்.